திருவள்ளூர் ; திருத்தணியிலிருந்து சித்தூர் சென்ற அரசு பேருந்தில் பயணியிடம் கொடுத்த மீதி பணத்தில் பத்து ரூபாய் கிழிந்த நோட்டை மாற்றி தர கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்ற நடத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து சித்தூர் நோக்கி அரசு பேருந்து தடம் எண் 164ஏ என்ற அரசு பேருந்து இன்று புறப்பட்டது. இதில் பயணி ஒருவர் கேஜி கண்டிகை பகுதியில் ஏறி, சோளிங்கர் வரை செல்ல வேண்டும் என்று இருபது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார்.
அதற்கு மீதி கிழிந்து போன பத்து ரூபாய் நோட்டை திருப்பி கொடுத்த கண்டக்டர் தனஞ்செழியன் (62788) என்பவர் கொடுத்துள்ளார். இதற்கு பதிலாக வேறு நோட்டை பயணி கேட்டதற்கு, இதைத்தான் தர முடியும் என்றும், மீறி கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் பேசி தாக்கவும் முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணி செய்வதறியாது தவித்தார்.
இந்நிலையில், தான் ஒரு திமுக பிரமுகர் என்றும், திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.ச. வில் நிர்வாகியாக இருப்பதால் என்னைப் பற்றி யாரிடம் புகார் கொடுத்தாலும் ஒன்னும் செய்ய முடியாது எனவும் பேசியுள்ளார்.
இதனிடையே, பயணியை தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.