திருவள்ளூர் ; செங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில் கோடிக்கணக்கில் மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்த முக்கிய பிரமுகர்களின் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பாலவாயல் பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள செங்குன்றம் சார் – பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது. இதனால், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வருமான வரி துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில், நேற்று துவங்கிய சோதனையானது, தொடர்ந்து விடிய விடிய நடைபெற்றது. செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 3 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மதியம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்டுள்ள நிலத்தின் விவரங்கள் கோப்புகள் முறையாக உள்ளதா..?, பணப் பரிவர்த்தனைகள் சரியான முறையில் நடைபெற்றுள்ளதா..? என அனைத்து ஆவணங்களையும் விரிவாக ஆய்வு செய்தனர். மேலும், சார் பதிவாளர் அலுவலர்களிடம் கிடுப்பிடி விசாரணையையும் நடத்தினர். வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை காரணமாக, சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இந்த சோதனையில் முக்கியப் பிரமுகர்கள் சிலரது ஆவணங்கள் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முழு விபரங்களை செங்குன்றம் சார்பதிவாளர் பழனி மற்றும் அங்குள்ள அலுவலர்களிடம் விடிய விடிய துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர் முக்கிய ஆவணங்களின் நகலை வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக கொண்டு சென்றனர்.
இதன் முழு விவரங்கள் வருமானவரித் துறையினரின் சென்னையில் உள்ள அலுவலகத்தில் வைத்து மேலும் விசாரிக்க உள்ளனர். அந்த விசாரணை முழுமை பெற்ற பின்னரே செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரப்பதிவு செய்த பெரும்புள்ளிகள் யார் என்றும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் யார் என்ற விவரமும் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துச் சென்றனர்.
நேற்று காலை 11:30 மணிக்கு தொடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை இன்று அதிகாலை 5 .45 மணிக்கு நிறைவு பெற்றது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.