கோவில் குருக்கள்கள், கோவிலுக்குள் ஆபாச வார்த்தைகளை பேசி சண்டை போட்டதால் பக்தர்கள் முகம் சுழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று காலை சித்திரை பிரம்மோற்சவ விழா காலை 5 மணி அளவில் கொடியேற்றத்துடன், 10 நாள் உற்சவம் துவங்கியது.
காலை கொடியேற்றுவதற்காக கொடிமரத்தின் மீது சுற்றி பெரிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடை மேல் ஏறி நின்று பூஜைகள் செய்யும்போது மேடை அசைவு ஏற்பட்டதால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் படிக்க: விஸ்வரூபம் எடுக்கும் நிர்மலா தேவி வழக்கு? புகார்களை விசாகா கமிட்டிக்கு அனுப்பாதது ஏன்? நீதிமன்றம் கிடுக்குப்பிடி!
இதனால் கோயில் அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களிடம் மேடையை சரியாக அமைக்காததால், நாங்கள் மிகவும் அச்சத்துடன் கொடி ஏற்ற வேண்டிய நிலைமை உள்ளது என கேட்டுள்ளனர். இதற்கு, “கோயில் ஊழியர்கள் நாங்கள் இரவும் பகலும் எவ்வளவு வேலை பார்க்கிறோம். இது ஒரு குறையாக கூறுகிறீர்களே,” என்று அருவருக்கத்தக்க தகாத வார்த்தையில் பேசியதால் அப்பகுதியில் அர்ச்சகர்களுக்கும், அலுவலக ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் புனித இடத்தில் இருக்கும் போது, இது போன்ற தவறான வார்த்தைகளை உபயோகித்து பேசுகிறார்கள் என முகம் சுழித்தது போல் சென்றனர். இதனால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.