ஹனுமன், பரமசிவன், பார்வதி வேடமணிந்து அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக பத்திரிக்கையை பாஜகவினர் வழங்கினர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
அதனையொட்டி, திருவாரூர் மாவட்டம் தண்டலை விளமல் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் பரிவார் அமைப்புகள் சார்பில் அழைப்பிதழ் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசன் தலைமையில் வீடு வீடாக சென்று அயோத்தியில் நடைபெறும் இராமர் கோவில் கும்பாபிஷேக பத்திரிக்கை மற்றும் அட்சதை வீட்டு வாசலில் ஏற்றும் அகல் விளக்குடன் வெற்றிலை பாக்கு புஷ்பங்கள் வைத்து அனைவரையும் அன்று மதியம் நடைபெறும் கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பில் பார்க்குமாறு எடுத்து கூறினர்.
அதேபோல், முதல் நாள் அருகே உள்ள கோவில்களில் அர்ச்சனை செய்தும், கும்பாபிஷேகத்தன்று மாலை 6.00 மணிக்கு அனைத்து வீட்டின் வாசல்களிலும் ஐந்து அகல் விளக்குகள் மற்றும் திருவிளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ரவி, எட்டியலூர் சிவா, ஓபிசி அணி மாவட்ட செயலாளர் வினோத்குமார், ஜெகதீசன் முரளி, விவேகானந்தன், கழுகுசங்கர், மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக பத்திரிக்கை வழங்கினர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.