திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தில் இந்து முறைப்படி தீபாவளி கொண்டாட்டம் நடத்தப்பட்டதற்கு இந்திய மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த 17ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த கொண்டாட்டத்தின் பொழுது ஜெய் ஸ்ரீ ராம் என ஆங்காங்கே வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதும், மேடைகளில் ஜெய் ஸ்ரீ ராம் என வாசகம் எழுதப்பட்டிருப்பதும், கோலத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என போடப்பட்டிருந்ததும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், புரோகிதர்களை அழைத்து வந்து மந்திரங்கள் சொல்லி பூஜை செய்து தீபாவளி கொண்டாட்டத்திலும் ஈடுபட்டதும், அதில் கல்லூரி துணை வேந்தர் கலந்து கொண்டதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திருவாரூர் மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இதில் சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்தும், ஏபிவிபி மாணவர் அமைப்பை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்திய மாணவர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.