தமிழகம்

ஒரே இடத்தில் திமுக – பாஜகவினர் மாறி மாறி கோஷம்.. பரபரப்பில் சென்னை!

சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.

சென்னை: சென்னை, கோயம்பேட்டில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில், பாஜகவினர் பொதுமக்களிடம் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், அனுமதி பெறாமல் கையெழுத்து போராட்டம் நடத்தக்கூடாது எனத் தெரிவித்தனர்.

இதனால் போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, போலீஸ் அதிகாரிகளிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “மக்களிடம் எங்களுடைய கோரிக்கையை எடுத்து வைத்து மும்மொழிக் கொள்கை தேவை என்பது குறித்து கையெழுத்து வாங்க இருக்கிறோம்.

பொதுமக்கள் பார்வையில் நாங்கள் செய்வது சரிதான். பாமர மக்களுக்கு மூன்று மொழி சொல்லிக் கொடுங்கள் என மிகவும் பொறுமையாகவும், அமைதியாகவும் கேட்க வந்திருக்கிறோம். நீங்கள் செய்வதை செய்துகொள்ளுங்கள். பொதுமக்களை பார்ப்பது தவறா?” எனக் கேள்வி எழுப்பினார்.

ஆனால், போலீசார் தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதை தடுத்ததால் பாஜகவினர், போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து, தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!

தொடர்ந்து, கைது செய்யப்பட்ட தமிழிசை சௌந்தராஜன் காவல் வாகனத்தில் ஏற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அங்கு வந்த திமுகவினர் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தடையை மீறி கையெழுத்து பெற்ற தமிழிசையைக் கைது செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு நிலவியது.

தமிழக பாஜகவின் கையெழுத்து இயக்கம்: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் நேற்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்தக் கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார். மேலும், சமக்கல்வி இணையதளம், சமக்கல்வி பாடல் ஆகியவையும் அறிமுகம்

Hariharasudhan R

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

12 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

13 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

14 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

15 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

15 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

16 hours ago

This website uses cookies.