காஞ்சிபுரம் : குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகத்தினர் ஆக்கிரமித்திருந்த 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை கையகப்படுத்தி வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல தனியார் குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது.
இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள பகுதியில் அதன் நிறுவனத்தால் பல ஆண்டுகளாக நீர்நிலை மற்றும் அனாதீனம் வகைப்பாட்டு புறம்போக்கு அரசு நிலம், சுமார் 32 ஏக்கர் 41 சென்ட் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டு பயன்படுத்தி வந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட நில நிர்வாக ஆணையம் உத்தரவின்பேரில் இன்று 200 கோடி மதிப்புடைய அரசுக்கு சொந்தமான நிலத்தை திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன், வட்டாச்சியர் ஜெயகாந்தன் உள்ளிட்ட வருவாய்துறையினர் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் மீட்டனர்.
குறிப்பாக, பொழுதுபோக்கு பூங்காவில் ஒரு பகுதியான ரோப்கார், நீச்சல் குளம், உணவகம் ஆகியவை அரசு நிலத்தில் இருந்ததால் அவற்றை மூடி சீல் வைத்தனர். மேலும், பொழுதுபோக்கு பூங்காவுக்கு சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றப்பட்டு அரசு நிலத்தை மாவட்ட நிர்வாகம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.