தமிழகம்

14 மாதமாக ஆணுக்குச் செல்லும் மகளிர் உரிமைத் தொகை.. கலெக்டர் வரை சென்றாலும் நீதியில்லை!

திண்டுக்கல்லில் தனது மகளிர் உரிமைத் தொகை வேறொரு ஆணுக்கு 14 மாதங்களாக கிடைத்து வருவதாக பெண் ஒருவர் புகார் அளித்து உள்ளார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடமதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர், தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து உள்ளார். இதன்படி, இவரது விண்ணப்பத்திற்கு அனுமதியும் கிடைத்து உள்ளது. ஆனால், அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு பணம் வராமல், குறுஞ்செய்தி (SMS) மட்டுமே வந்து உள்ளது.

இதனால், இவருக்கு வர வேண்டிய மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் 60 வயதான கிருஷ்ணன் என்பவருக்குச் சென்று உள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணன் என்பவரிடம் தெரிவித்த போது, அவர் இரண்டு முறை ஆயிரம் ரூபாயை பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்து உள்ளார்.

ஆனால், ‘இது தொடர்பாக நீங்கள் அரசிடம் முறையிடுங்கள்’ எனக் கூறிய கிருஷ்ணன், இதுவரை எங்களுக்கு அந்தப் பணத்தை அனுப்பவில்லை என அப்பெண் கூறுகிறார். அதேநேரம், இது தொடர்பாக, வட்டாசியர் அலுவலகம், பழனி ஆர்டிஓ, மாவட்ட ஆட்சியர் வரை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

சிறப்பு முகாம்களில் கூட புகார் அளித்ததாகக் கூறும் அப்பெண், இது தொடர்பாக சென்னைக்கு நீங்கள் செல்ல வேண்டும் என அரசு அதிகாரிகள் கூறுவதாகத் தெரிவிக்கிறார். இந்த மனு கொடுப்பதற்காக எடுக்கப்படும் ஜெராக்ஸ் உள்ளிட்டவற்றிற்காகவே மாதா மாதம் 300 ரூபாய் வரை செலவாகிறது என்கிறார் அபெண்.

இதையும் படிங்க: தவெகவினரை புரட்டி எடுத்த திமுகவினர்.. போலீசார் கண்முன்னே முட்டிமோதல்!

மேலும், எங்களது வங்கிக் கணக்கின் கடைசி 2 எண்கள் மாறியதாலாயே அவரது வங்கிக் கணக்கிற்குச் செல்வதாக குறிப்பிடும் அப்பெண், இது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.