தமிழகம்

குரூப் 4 பணியிடம் குறைகிறதா? டிஎன்பிஎஸ்சி 2025 அட்டவணை வெளியானது!

டிஎன்பிஎஸ்சி 2025 அட்டவணை வெளியான நிலையில், மீண்டும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) செய்கிறது. இதன்படி, பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகள் நடைபெற்று முடிந்தன.

இதில் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 ஆகிய தேர்வுக்கான அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது.

இதன்படி, 10ஆம் வகுப்பு தேர்ச்சியைத் தகுதியாகக் கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2025, ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகும். இதற்கான தேர்வு ஜூலை 13 அன்று நடைபெறும். அதேபோல், 2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ (TNPSC Group 2, 2A) தேர்வு குறித்த அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்பட்டு, செப்டம்பர் 28ஆம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஏப்ரல் 1 அன்று அறிவிக்கப்பட்டு, ஜூன் 15-ல் தேர்வு நடைபெறும். மேலும், டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தொடர்பாக அக்டோபர் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியாகி, டிசம்பர் 21ஆம் தேதி தேர்வு நடைபெறும். மேலும், தொழில்நுட்பத் தேர்வுகள் நேர்காணல் அடிப்படையிலான ஆட்சேர்ப்பு, நேர்காணல் அற்ற ஆட்சேர்ப்பு மற்றும் டிப்ளமோ/ ஐடிஐ தரத்திலான ஆட்சேர்ப்புக்கு முறையே ஜூலை 21, ஆகஸ்ட் 4 மற்றும் ஆகஸ்ட் 27 ஆகிய நாட்களில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தேர்வு அறிவிப்பின்போது வெளியிடப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. கட்-ஆஃப் குறைய வாய்ப்பு?

முன்னதாக, 2025ஆம் ஆண்டில் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வு நடைபெறுவது சந்தேகம் தான் என்ற கருத்து நிலவிய நிலையில், தற்போது இரு தேர்வுகளும் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக உள்ளது. எனவே தான், அடுத்த முறை குரூப் 4 தேர்வு சந்தேகம் என கல்வியாளர்கள் கருதினர். அதேநேரம், குரூப் 4 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டாலும், குறைவான பணியிடங்களே நிரப்பப்படும் என கருதப்படுகிறது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.