தமிழகம்

குரூப் 4 பணியிடம் குறைகிறதா? டிஎன்பிஎஸ்சி 2025 அட்டவணை வெளியானது!

டிஎன்பிஎஸ்சி 2025 அட்டவணை வெளியான நிலையில், மீண்டும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) செய்கிறது. இதன்படி, பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகள் நடைபெற்று முடிந்தன.

இதில் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 ஆகிய தேர்வுக்கான அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது.

இதன்படி, 10ஆம் வகுப்பு தேர்ச்சியைத் தகுதியாகக் கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2025, ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகும். இதற்கான தேர்வு ஜூலை 13 அன்று நடைபெறும். அதேபோல், 2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ (TNPSC Group 2, 2A) தேர்வு குறித்த அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்பட்டு, செப்டம்பர் 28ஆம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஏப்ரல் 1 அன்று அறிவிக்கப்பட்டு, ஜூன் 15-ல் தேர்வு நடைபெறும். மேலும், டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தொடர்பாக அக்டோபர் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியாகி, டிசம்பர் 21ஆம் தேதி தேர்வு நடைபெறும். மேலும், தொழில்நுட்பத் தேர்வுகள் நேர்காணல் அடிப்படையிலான ஆட்சேர்ப்பு, நேர்காணல் அற்ற ஆட்சேர்ப்பு மற்றும் டிப்ளமோ/ ஐடிஐ தரத்திலான ஆட்சேர்ப்புக்கு முறையே ஜூலை 21, ஆகஸ்ட் 4 மற்றும் ஆகஸ்ட் 27 ஆகிய நாட்களில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தேர்வு அறிவிப்பின்போது வெளியிடப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. கட்-ஆஃப் குறைய வாய்ப்பு?

முன்னதாக, 2025ஆம் ஆண்டில் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வு நடைபெறுவது சந்தேகம் தான் என்ற கருத்து நிலவிய நிலையில், தற்போது இரு தேர்வுகளும் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக உள்ளது. எனவே தான், அடுத்த முறை குரூப் 4 தேர்வு சந்தேகம் என கல்வியாளர்கள் கருதினர். அதேநேரம், குரூப் 4 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டாலும், குறைவான பணியிடங்களே நிரப்பப்படும் என கருதப்படுகிறது.

Hariharasudhan R

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

2 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

4 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

4 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

5 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

6 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

6 hours ago

This website uses cookies.