கரூரில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சரியான நேரத்திற்கு வந்தும் அனுமதிக்கவில்லை எனக் கூறி போட்டி தேர்வு எழுத வந்தவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி குரூப் 7 பி போட்டித் தேர்வுகள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்திலும் நடைபெறுகிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர்வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போட்டித் தேர்வுகள் காலையில் துவங்கி நடைபெற்றது.
இன்று காலையில் வழக்கம் போல் போட்டி தேர்வு எழுத வந்தவர்கள் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் அனுமதித்தனர். அதன் பிறகு வந்தவர்களை அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த தேர்வு மையத்தில் 240 பேர் தேர்வு எழுத ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் காலை 9 மணிக்குள் 117 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்துள்ளனர். அதன் பிறகு வந்த 10 பேர் தங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர். அவர்கள் அனுமதிக்கும் நேரம் முடிந்து விட்டதால் அனுமதிக்க இயலாது என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நாங்கள் 8.45 மணிக்கே வந்து விட்டோம் எங்களை அனுமதிக்க மறுக்குறீர்களா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கரூர் – நாமக்கல் சாலையில் மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த கரூர் மாநகர போலீசார் தேர்வர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தேர்வு எழுத வந்தவர்களில் பெண் ஒருவர், உரிய நேரத்திற்கு வந்தும்.. தனது கனவு சிதைக்கப்பட்டு விட்டதாகக் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் அங்கிருந்தோரை உலுக்கியது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.