டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியானது.
இதில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க், தனிச் செயலாளர், இளநிலை நிர்வாகி, தொழிற்சாலை மூத்த உதவியாளர், வனப் பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்பப்படுகின்றன.
இதனையடுத்து, கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் எழுதினர். முதலில் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு இரண்டு முறை காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.
இதன்படி, செப்டம்பர் 11ஆம் தேதி மேலும் 480 இடங்களும், அக்டோபர் 9ஆம் தேதி 2 ஆயிரத்து 208 பணியிடங்களும் கூடுதலாக அனுமதிக்கப்பட்டது. இதனால் தற்போது மொத்தம் 8 ஆயிரத்து 932 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மேலும், அக்டோபர் மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: வீட்டில எப்பவும் இருக்கும் இந்த பொருட்கள வைத்தே சூப்பரான ஃபேஷியல் ஸ்க்ரப் ரெடி பண்ணிடலாம்!!!
ஆனால், மாத இறுதி ஆகியும் எந்தவொரு தகவலும் வரவில்லை. இதனால் தேர்வர்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்று வெளியாகி உள்ள தகவலின் படி, அக்டோபர் 30ஆம் தேதி, அதாவது தீபாவளிக்கு முந்தைய நாள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.