டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியானது.
இதில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க், தனிச் செயலாளர், இளநிலை நிர்வாகி, தொழிற்சாலை மூத்த உதவியாளர், வனப் பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்பப்படுகின்றன.
இதனையடுத்து, கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் எழுதினர். முதலில் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு இரண்டு முறை காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.
இதன்படி, செப்டம்பர் 11ஆம் தேதி மேலும் 480 இடங்களும், அக்டோபர் 9ஆம் தேதி 2 ஆயிரத்து 208 பணியிடங்களும் கூடுதலாக அனுமதிக்கப்பட்டது. இதனால் தற்போது மொத்தம் 8 ஆயிரத்து 932 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மேலும், அக்டோபர் மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: வீட்டில எப்பவும் இருக்கும் இந்த பொருட்கள வைத்தே சூப்பரான ஃபேஷியல் ஸ்க்ரப் ரெடி பண்ணிடலாம்!!!
ஆனால், மாத இறுதி ஆகியும் எந்தவொரு தகவலும் வரவில்லை. இதனால் தேர்வர்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்று வெளியாகி உள்ள தகவலின் படி, அக்டோபர் 30ஆம் தேதி, அதாவது தீபாவளிக்கு முந்தைய நாள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.