தமிழகம்

தனியார் பேருந்துகளை தத்தெடுத்த தமிழக அரசு.. விழுப்புரம் கோட்டத்தில் அவலம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தில் இருந்து தனியார் பேருந்துகளை அரசு வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறது.

விழுப்புரம்: தமிழ்நாட்டில் சாலைப் போக்குவரத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ், தொலைதூரப் பேருந்துகளான அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் செமி ஸ்லீப்பர், ஸ்லீப்பர் வசதிகளுடன் குளிர்சாதன வசதி மற்றும் குளிர்சாதன வசதி அல்லாத சாதாரணப் பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.

இதைத் தவிர, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகளை தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கோட்ட பேருந்துகள் இயக்கி வருகின்றன. மேலும், கிராமங்களுக்குள் டவுண் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பண்டிகை காலங்களில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வர்.

அவ்வாறு செல்லும்போது ஏற்படும் கூட்ட நெரிசலைச் சமாளிக்க, அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும். இதில் முன்பதிவு செய்யப்படும் வகையிலான பேருந்துகளும், முன்பதிவில்லா பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறைக்காக சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் ஆயிரத்து 28 பேருந்துகள் சேர்த்து மொத்தம் 3 ஆயிரத்து 120 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 240 பயணிகள் சென்றுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: நண்பர்களை காவு வாங்கிய கண்டெய்னர்.. இறப்பிலும் ஒன்றாக உயிரிழந்த சோகம்…!!

அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருச்சி ஆகிய ஊர்களுக்கு செல்வதற்காக தனியார் பேருந்துகளை அரசு வாடகைக்கு எடுத்துள்ளது. இதனால் பயணிகள் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொண்டனர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது போக்குவரத்தில் தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பதாக உள்ளதாக சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

14 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

16 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

16 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

17 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

17 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

18 hours ago

This website uses cookies.