தடையை மீறி ஜன.,21ம் தேதி தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்கப்படும் : தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2022, 2:28 pm
Kal - Updatenews360
Quick Share

தமிழக அரசின் தடையை மீறி ஜனவரி 21 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கல் இறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்திக்க தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவரும் கல் இயக்க ஒருங்கிணைப்பாளருமான நல்லசாமி பேசுகையில், தமிழக அரசு பனை தென்னை மரங்களிலிருந்து மீரா பானம் கல் ஆகியவை இறக்குவதற்கும் அதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் உலக நாடுகளில் கல் உணவுப் பொருள் என்று கூறியுள்ளனர். ஆனால் தமிழக அரசியல்வாதிகள் மட்டும் கல் போதை பொருள் என்று கூறி வருகின்றனர்.

தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கல் இறக்கி அதனை கலப்படமில்லாமல் விற்பனை செய்தால் எந்த விதமான தீங்கும் ஏற்படாது.

ஆனால் தமிழக அரசிற்கு கலப்படமில்லாமல் அதனை விற்பனை செய்வதற்கு முடியவில்லை. அவர்களுடைய கையாலாகாததனத்தை இதனை போதை பொருள் என்று கூறுகின்றனர்

சம்பள கமிஷன் கமல் படுத்துவதைப் போன்று விவசாய கமிஷனை அமல்படுத்த வேண்டும் அதனை அமல்படுத்தி விட்டு இலவசம் மின்சாரம் உள்ளிட்ட அவற்றை ரத்து செய்தால் போதும் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரும்.

இலவச மின்சாரத்தால் விவசாயிகளுக்கு எந்த விதமான பயனும் கிடையாது. இந்த சட்டங்களை யார் ஏற்றுகிறார்களோ அவர்களுடைய உறவினர்கள் வாரிசுகள் அவர்களுடைய நண்பர்களுக்கு தான் இது உபயோகிக்கப்படும்.

வரும் ஜனவரி மாதம் 21ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடையை மீறி தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கல் இறக்கப்படும். தேவையற்ற இலவசங்கள் நாட்டை சீரழிக்கும்.

இலவசங்களை அள்ளி அள்ளி கொடுத்தால் இலங்கைக்கு ஏற்படுவது போன்ற ஒரு நிதி நெருக்கடி தமிழகத்திலும் கட்டாயம் உருவாகும்.

Views: - 790

0

0