முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்களை பேசினார். அப்போது பேசிய அவர், “அதிமுக வெற்றி மாநாடு மிகக்சிறப்பாக நடைபெற உள்ளது. இந்தியாவில் எழுச்சிமிக்க மாநாடாக அதிமுகவின் மாநாடு நடைபெற உள்ளது. அதிமுக ஓடுமா ஓடாதா அழிந்துவிடும், ஒழிந்துவிடும் என்றெல்லாம் கேலி பேசினார்கள்.
ஆனால் 31ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியை கொடுத்து, அதிக நாட்கள் மாநிலத்தை ஆண்ட இயக்கமாக அதிமுக உள்ளது. ஜெயலலிதா எம்ஜிஆர் மதுரையை நேசித்தார்கள். அவர்கள் வாரிசான எடப்பாடி பழனிசாமியும் மதுரையை நேசிக்கிறார். அதிமுக மாநாட்டுக்கான பூமிபூஜை 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
1 கோடியே 65 லட்சம் பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர். அதிமுகவில் சேர பொதுமக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதிமுகவின் எழுச்சி தொண்டர்களின் உண்ர்ச்சியை தெரிந்து கொள்ளுகிற மாநாடாக அதிமுக மாநாடு இருக்கும்.
சித்திரைத் திருவிழா போல அதிமுக மதுரையில் கடலை மக்களை பார்த்ததில்லை. கடலை அனைத்து குடும்ப அட்டைக்கும் கொடுப்போம் என தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளார்கள். எப்படி கொடுக்க போகிறார்கள் என தெரியவில்லை.
சொல்வது ஒன்று. செய்வது ஒன்றாக திமுக அரசு செய்து வருகிறது. பொய்யை சொல்லி விளம்பரம் மட்டுமே நோக்கமாக கொண்டு முதல்வரும், அரசும் செயல்படுகிறது.
மக்களுக்கு தக்காளியே மறந்துபோகும் நிலை உள்ளது. ரசத்திலும் சாம்பாரிலும் தக்காளி போட முடியாத நிலை உள்ளது. பிடிஆரின் பதவி பறிக்கப்பட்டு எங்கோ மூலையில் உள்ளார். அவரை கண்டுபிடித்து தாருங்கள்.
பிச்சை என வாய்க்கொழுப்பாக அமைச்சர்கள் பேசுகிறார்கள். அதிமுகவின் உணர்வை புரிந்து கொண்டவர்கள் அதிமுகவில் உணர்வார்கள். அதிமுகவில் சாதி மத வித்தியாசம் இல்லை. இஸ்லாமியர் கூட அதிமுகவில் தலைமை தாங்குகிறார். திமுகவில் இதுபோல இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார் செல்லூர் ராஜு.
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
This website uses cookies.