கோவை: கந்து வட்டி கொடுமையை தீர்க்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் இருப்பதாக கூறி துக்கு கயிறுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். ஆட்டோ டிரைவர். இவர் ஆட்சியர் அலுவலகத்தில் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டிக்கொண்டு வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் ஆட்டோ ஓட்டி வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது பாட்டிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது.
அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக ஒருவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி அதற்காக மாதம் ரூ.1500 வட்டி கட்டி வந்தேன். இதுவரை ரூ.85 ஆயிரம் செலுத்தி உள்ளேன். தற்போது அந்த பத்திரத்திற்கு அவர் ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் செலுத்தி பெற்றுக் கொள்ளக் கூறுகிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் அவரிடம் இது குறித்து கேட்டோம். அதற்கு அவர் தகாத வார்த்தைகளால் எங்களது குடும்பத்தை திட்டி விரட்டிவிட்டார். இதுகுறித்து கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் ஒரு முறை மனு அளித்துள்ளோம். இந்த மனுவிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.