கொடைக்கானல் : ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணியர் பலர், நேற்று கொடைக்கானலில் குவிந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், பள்ளி காலாண்டு விடுமுறை, சில வாரங்களுக்கு முன் ஆயுத பூஜையை முன்னிட்டு, சுற்றுலா பயணியர் குவிந்தனர். தற்போது தொடர் மழை, தீபாவளியால் தமிழக பயணியர் வருகை முற்றிலும் இல்லாத சூழல் இருந்தது.
இதனிடையே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிமாநில சுற்றுலா பயணியர் பலர் கொடைக்கானலில் முகாமிட்டனர். இங்குள்ள செட்டியார் பூங்கா, பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, வனச் சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர்.
ஏரி சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். சுட்டெரித்த வெயிலுடன் இதமான சூழல் நீடித்த நிலையில் பயணியர் படகு சவாரி செய்தனர்.
தொடர்ந்து கூட்டம் அதிகரிப்பதால் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல கூடிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.