Categories: தமிழகம்

திருமணமாகி 2 வருடங்களில் சோகம்.. மனைவியை கொன்று புதைத்த கணவன் : மரத்தில் தொங்கிய சடலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வி.அலம்பலம் கிராம ஏரிக்கரையில் மண் அள்ளும் இயந்திரமான ஹிட்டாச்சி ஓட்டுநர், தனது மனைவியை கொன்று புதைத்து விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், லட்சுமனாபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கும், அதே பகுதியில் உள்ள மா.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த சுவேதா என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில், ஹிட்டாச்சி ஓட்டுனரான சக்திவேல், தான் வேலைக்கு செல்கிற இடங்களுக்கெல்லாம் தனது மனைவியை உடன் அழைத்துச் சென்று, அங்கேயே தங்கி விடுவாராம்.

கடந்த சில நாட்களாக சின்னசேலம் வட்டம் வி.அலம்பலம் கிராம ஏரியில் மண் அள்ளும் இயந்திரம் வைத்து, வேலை செய்து கொண்டிருந்த சக்திவேல், அதே பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, தனது மனைவியுடன் தங்கி இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று மாலை வி.அலம்பலம் ஏரியில் தனது மனைவி சுவேதாவை கொன்று புதைத்து விட்டு, அவரும் மரத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்த காட்சியைக் கண்டு, அப்பகுதி மக்கள் கீழ்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரது உடல்களையும் கைப்பற்றினர். சுவேதாவின் உடலை தோண்டி எடுக்க தாமதமான நிலையில், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி தேவராஜ், சின்னசேலம் தாசில்தார் கமலக்கண்ணன், காவல் நிலைய ஆய்வாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: EVMல் மோசடி செய்ததால் தான் ஜெகன் தோல்வி.. விசாரித்து ஆக்ஷன் எடுங்க.. குடும்பத்துடன் தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்!

இருவரது உடல்களும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சக்திவேலின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.