ஓசூர் பகுதியை சேர்ந்த 6 ஆம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி அவர்கள் வீடு அமைந்திருக்கும் தெருவில் சிறுமிகளோடு விளையாடி உள்ளார்.
அப்போது சிறுமிக்கு தாகம் எடுக்கவே உடன் விளையாடிய ஒரு சிறுமியிடம் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுமி தனது வீட்டிற்கு சென்று தண்ணீர் குடித்து வருமாறு கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: போலீசாரால் என் வாழ்க்கையை போச்சு…நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் நடந்த குளறுபடி…இளைஞன் பரபரப்பு பேட்டி..!
அதனை நம்பி தண்ணீர் குடிக்க சென்ற சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ஓசூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9, 10, 11 ஆம் வகுப்புகளில் படிக்கக்கூடிய 14,15,16 வயது நிரம்பிய மாணவர்கள் பாலியல் சீண்டல் மற்றும் துன்புறுத்தல் செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி நடந்த சம்பவங்கள் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மை என தெரிய வந்ததையடுத்து சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அரசு பள்ளி மாணவர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் சிறுவர்கள் என்பதால் சேலத்தில் உள்ள கூராய்வு மையத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.