திருப்பூர் காங்கேயம் சாலை நல்லூர் காவல் நிலையம் அருகே ஊர்க்காவல் படை காவலர் வீர சின்னன் காவல்துறை வாகனத்தை நோக்கி வந்துள்ளார். அவருக்கு முன்புறமாக ராஜேஸ்வரி என்பவர் தனது எட்டு வயது மகளை அரசு பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக காவல் வாகனம் மோதியதில் திவ்யதர்ஷினி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் திவ்ய தர்ஷினி மீது காவல்துறையினர் வாகனம் மோதியுள்ளது .
இதில் சம்பவ இடத்திலேயே திவ்யதர்ஷினி உயிரிழந்தார். உடன் வந்த தாயார் ராஜேஸ்வரி பலத்த காயங்களுடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பொதுமக்கள் காவல்துறை வாகனம் மற்றும் வாகனத்தில் இருந்த காவலர் வீர சின்னன் ஆகியோரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துனை ஆணையர் வனிதா உள்ளிட்ட காவலர்கள் விபத்தை ஏற்படுத்திய காவலரை மீட்டு சாலை ஓரமாக அமர வைத்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் திருப்பூர் காங்கேயம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். காவலர் வாகனம் மோதியதில் எட்டு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.