புதுச்சேரி : புதுச்சேரியில் ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த போது இளைஞர் தவறி விழுந்து உயிரிழிந்ததை அடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (50). இவர் சிதம்பரம் கோயில் அருகே பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜீவானந்தம் (20), விழுப்புரத்தில் உறவினர் வீட்டில் தங்கி தனியார் அச்சகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜீவானந்தம் சிதம்பரத்தில் உள்ள தனது தந்தை சந்தித்து விட்டு நேற்று அங்கிருந்து விழுப்புரம் செல்வதாக கூறிவிட்டு புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் ஒருவரை சந்திக்க வந்துள்ளார்.
அவர் வீட்டில் இல்லாத காரணத்தால் நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு பகுதியில் மாலை மீன் பிடித்து கொண்டிருந்த போது ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் ஜீவானத்தை மீட்டு தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து இது குறித்து தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஜீவானந்தம் உடலை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.