ஆபாச செயலியால் ஒருசிலர் வாழ்க்கை அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், செல்போனில் மூழ்கி கிடந்தார். இசைக் கல்லூரியில் படித்து வந்த அவர், நேற்று முன்தினம் இரவு, ஆபாச செயலியை பயன்படுத்தியுள்ளார்.
புதிய நட்பை ஏற்படுத்த பெண்ணை வலை விரித்து தேடியுள்ளார். அப்போது பெண் ஒருவர் அந்த இளைஞரை வசியப்படுத்தியுள்ளார். மயிலாப்பூர் வடக்கு மாட வீதிக்கு வந்தால் இன்ப பரிசு உள்ளது என்றும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் வருமாறு கூறியுள்ளார்.
இன்ப பரிசுக்காக காத்திருந்த அந்த இளைஞர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பெண் கூறிய இடத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள், கல்லூரி இளைஞரை அருகில் இருந்து கழிவறைக்கு இழுத்து சென்று கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்யுள்ளனர்.
அவரிடம் பணம் இல்லாததால், ஜி பே மூலம் ரூ.1300 அனுப்பியுள்ளார். அது மட்டுமல்லாமல், இளைஞரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து, இந்த விஷயத்தை போலீசிடம் கூறினால், வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என மிரட்டி அனுப்பியுள்ளனர்.
நமக்கு இது தேவைதான் என்று, பயத்தில் தப்பிய இளைஞர், உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், உடனே போலீசார் விசாரணையும் நடத்தி இருவரையும் பிடித்துள்ளனர்.
மேலும் கல்லூரி மாணவரை ஏமாற்றி நூதன வழிப்பறி செய்தது மயிலாப்பூர் மாங்கொல்லை கார்டன் பகுதியை சேர்ந்த சூர்யா மற்றும் அஜய் என்பதும், அவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இருவரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆபாச டேட்டிங் செயலியால் கல்லூரி மாணவர் வழிப்பறி சம்பவத்தில் சிக்கியது பலருக்கு எச்சரிக்கை மணியாக உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.