நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அடுத்த பெரியமருதூர் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகன் சுதர்சனம் (14), இதேப்பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் லோகேஷ் (17) ஆகிய இருவரும் லோகேஷின் தந்தை ராமசாமியின் ஆம்னி வேனை எடுத்துக்கொண்டு நேற்று இரவு 11 மணிக்கு கபிலர்மலை – பரமத்தி சாலையில் சுதர்சனம், லோகேஷ் ஆகிய இருவரும் ஓட்டி பழகியதாக தெரிகிறது.
ஆம்னி வேனை சுதர்சனம் ஒட்டி நிலையில் பரமத்தியில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த டொயோட்டோ பார்ச்சூனூர் காரை இருக்கூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது சாலையின் குறுக்கே வந்த ஆம்னி வேன் மீது பார்ச்சூனூர் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி வேன் சுக்குநூறாக நொறுங்கி அதிலிருந்த சுதர்சனம், லோகேஷ் ஆகிய சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜேடர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த இரு சிறுவர்களின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக பரமத்தி வேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிலர்மலையில் இரவு நேரத்தில் வாகனம் ஓட்டி பழகும் போது விபத்து ஏற்பட்டு இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.