கோவை: குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட ஒரு நாள் பயிற்சி முகாமை மாநகராட்சி மேயர் கல்பனா தொடங்கி வைத்தார்.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி வெரைட்டிஹால் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
இதனை கோவை மேயர் கல்பனா ஆனந்த்குமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மேலும் அங்கு காட்சிப்படுத்த பட்டிருந்த குழந்தைகள் மற்றும் கர்பிணி பெண்களுக்கு வழங்கபட வேண்டிய உணவு பொருட்களை பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் சமூக நலத்துறை, குழந்தைகள் துறை அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திமதி அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு எவ்வகை உணவுகள் வழங்கப்படுகிறது, குழந்தைகளுக்கு எவ்வாறு பாடங்கள் கற்று தரப்படுகின்றன என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களின் தேவைகள் குறித்தும், அங்கன்வாடி மையங்களை மேலும் எவ்வாறு மேம்படுத்துவது, குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் 18 வட்டாரங்களில் 1697 அங்கன்வாடிகளும் 35,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
This website uses cookies.