Categories: தமிழகம்

இளைஞரிடம் அத்துமீறிய திருநங்கைகள்.. கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் வழிப்பறி : போலீசார் எடுத்த அதிரடி ஆக்ஷன்!!

கரூரில் இளைஞர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் செயின் மற்றும் 27 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்த 4 திருநங்கைகள் எஸ்பி உத்தரவின் பேரில் போலீசாரால் கைது.

கரூர் நகர காவல் நிலைய பகுதிக்குட்பட்ட கரூர் பேருந்து நிலையம் அருகில் இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம், தாராபுரம், மூலனூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சிறுநீர் கழிப்பதற்காக சென்ற போது பேருந்து நிலையத்தில் இருந்த இசைப்பிரியா (வயது 24), ராகவி (வயது 27), தில்ஷிகா,(வயது 23), இனியா (வயது 22) ஆகிய திருநங்கைகள் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின் மற்றும் ரூ.27,500/- பணத்தை பறித்து கொண்டனர்.

இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து திருநங்கைகளிடமிருந்து 2 பவுன் செயின் மற்றும் பணத்தை மீட்டு திருநங்கைகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரூர் நகர காவல் நிலையத்தில் திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து திருநங்கைகள் வழிப்பறி செய்த நகை மற்றும் பணத்தை மீட்டது தொடர்பாக, கேள்விபட்டு மேற்படி சம்வத்தை போன்று திருநங்கைகளிடம் நகை மற்றும் பணத்தை இழந்தவர்கள் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வருகின்றனர் எனவும், புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கரூர் நகர காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.