இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வருபவர்களுக்கு பட்டாசு பாக்ஸ் கொடுத்து தருமபுரி போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தமிழக அரசு இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும். விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில் இன்று தருமபுரி போக்குவரத்து துறை மற்றும் சமுக ஆர்வலர்கள் இணைந்து 4 ரோடு சந்திப்பு சாலையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிந்து செல்பவர்களை கண்டறிந்து அவர்களை பாராட்டி போக்குவரத்து துறை துணை ஆய்வாளர் சின்னசாமி தலைமையில் சமுக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இலவசமாக பட்டாசு பாக்ஸ்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினர்.
மேலும் தலைகவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம், தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டக்கூடாது எனவும், 4 சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்கக்கூடாது எனவும், ஒலிபெருக்கி மூலம் அறிவுரை வழங்கினர்.
போக்குவரத்து காவல் துறையினரின் இந்த செயல் பொது மக்களிடையே பாராட்டை பெற்றது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.