மதுரை போக்குவரத்து ஊழியரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்ட போக்குவரத்து ஊழியரான மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவரது இருசக்கர வாகனம் காணாமல் போனது.
இதையடுத்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பைக்கை திருடிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து சம்பவம் குறித்து மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை எவ்வித அச்சமும் இன்றி திருடிச் செல்லும் மர்ம நபரை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
This website uses cookies.