வேலூர் : காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கேட்பாரற்று கிடந்த டிராவல் பேகில் 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்களின் வழியாக அண்டை மாநிலங்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி செல்லப்படுகின்றது.
அதனை தடுக்கும் வகையில் இன்று வேலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மோகன்,சீனிவாசன், தலைமை காவலர் சாந்தி, காவலர் மதன், போலீசார் கொண்ட குழுவினர் இன்று காட்பாடி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கேட்பாரற்று கிடந்த டிராவல் பேகை பிரித்து சோதனை மேற்கொண்டனர்.
அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வேலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அதனை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.