Categories: தமிழகம்

மகப்பேறு மருத்துவர் இல்லாமல் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை : அடுத்தடுத்து புகாரில் சிக்கிய பிரபல தனியார் மருத்துவமனைக்கு சீல்!!

குன்னத்தூரில் மகப்பேறு மருத்துவர் இல்லாமல் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்த
தனியார் மருத்துவமனை அறுவை அரங்குக்கு சீல் வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள செங்கப்பள்ளி ரோட்டில் சுமதி தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமல் கர்ப்பிணிகளுக்கு பேறுகால முன் கவனிப்பு, பிரசவம், அறுவை சிகிச்சை, கருக்கலைப்பு போன்றவை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.


மேலும் அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசவம் பார்க்கப் பட்ட பெண் ஒருவர் இறந்ததாகவும் புகார் வந்தது. இதன் பேரில் அதிகாரிகள் சுமதி மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவசர கால சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டதால் மகப்பேறு டாக்டர்கள் இல்லாமல், மகப்பேறு தொடர்பான சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடாது என மருத்துவமனை நிர்வாக இயக்குனர் விஸ்வநாதனிடம் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் மீண்டும் சுமதி மருத்துவமனையில் மகப்பேறு தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகார்கள் வந்தது. அதன்பேரில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா மற்றும் அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது மீண்டும் மகப்பேறு டாக்டர் நியமிக்கப்படாமல், டாக்டர் விஸ்வநாதன் மகப்பேறு சிகிச்சைகள் மற்றும் கருக்கலைப்பு மேற்கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவமனையில் இயங்கி வந்த பிரசவ பகுதி மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

விஸ்வநாதனின் மருத்துவ கல்வி தகுதிக்கு ஏற்ப அவர் பொது சிகிச்சை மட்டும் அளிக்க அறிவிக்கப்பட்டது. மேலும் இனி வருகிற காலத்தில் மகப்பேறு மருத்துவர் ஒருவர் நியமித்து அவர்கள் தொடர்பான சிகிச்சைகள் அனுமதி பெற்று மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் சுமதி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழ் ரத்து செய்யப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

16 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

17 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

17 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

18 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

19 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

19 hours ago

This website uses cookies.