கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படைப் பிரிவு சி.ஐ.எஸ்.எப் ஆய்வாளராக பணி புரியும் குமார் ராஜ் பரதன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்பொழுது தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஒருவர் அனுமதி இன்றி நுழைந்து இருப்பதை கண்டு அறிந்தார் உடனடியாக அவரை பிடித்து ஆய்வாளர் விசாரணை நடத்தினார்.
இதையும் படியுங்க: காலையிலேயே ஷாக்.. வானளவு உயரும் தங்கம் விலை!
விசாரணையில் அந்த நபர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தருண் மாலிக் என்பதும், அவர் நகை தொழில் செய்து வருபவர் என்பதும் தெரிய வந்தது.
பின்னர் தருண் மாலிக் பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பீளமேடு காவல் துறையினர் கைது செய்தனர்.
விமான நிலைய பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததற்கான காரணம் ? அவரது நோக்கம் ? ஆகியவற்றை குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பலமுறை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டு இருப்பதால், இச்சம்பவம் விமான நிலையம் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.