திருச்சி : மண்ணச்சநல்லூர் அருகே வெடிக்காத வெடியை கையில் எடுத்தபோத வெடித்ததால சிறுவனின் 3 கைவிரல்கள் துண்டானது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அழிஞ்சகரை கிராமத்தைச் சேர்ந்த மருதை,லட்சுமி தம்பதியின் ஒரே மகன் சூர்யா(16). இவரின் தந்தை கடந்த மூன்று வாரங்களுக்கு முன் இறந்துவிட்டார். கூலி வேலை செய்யும் லட்சுமியும் மகன் சூர்யாவும் தனியாக வசித்து வருகின்றனர். 10 ம் வகுப்பு வரை படித்த சூர்யா தற்போது ஜேசிபி ஆப்பரேட்டர் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் கடந்த வருடம் கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு வருடாந்திர பூஜை நேற்று நடைபெற்றது.
காலையில் பூஜைகள் முடிந்த பிறகு மாலையில் சூர்யா தீபாவளிக்கு வாங்கி மீதம் இருந்த வெடிகளை தன் வீட்டிலிருந்து எடுத்து வந்து கோயில் முன்பு வெடித்துள்ளார். அப்போது ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்தது. பின்னர் சூர்யா அந்த பட்டாசை தனது வலது கையில் எடுத்துள்ளார். அப்போது திடீரென அந்த பட்டாசு வெடித்ததில் சிறுவனின் கை 3 விரல்கள் சிதறியது. வலியால் அலறித் துடித்த சூர்யாவை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சூர்யாவுக்கு தொடர் சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.