கரைபுரண்டோடும் காவிரி ஆறு… குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் மாயம்.. நீண்ட தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு

Author: Babu Lakshmanan
3 August 2022, 9:25 pm
Quick Share

திருச்சி : காவிரி குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீர் மூழ்கி மாயமான நிலையில், சடலமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

திருச்சி மதுரை ரோடு ஜீவா நகர் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் மகேஷ்குமார். இவர் மரக்கடையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். நேற்று மாலை மேலசிந்தாமணி அருகே உள்ள காந்தி படித்துறையில் குளிக்க சென்ற போது, தண்ணீர் வேகத்தில் அடித்து செல்லப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்த கோட்டை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அந்த மாணவரின் உடல் திருச்சி அருகே உள்ள ஒட்டக்குடி காவிரி ஆற்றுப்பகுதியில் பகுதியில் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். தொடர்ந்து உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 450

0

0