திருச்சி மாநகராட்சி தூய்மை நகரத்தின் முதலிடம் பிடித்ததற்கான சான்றிதழை மேயர், ஆணையர் பெற்றுக்கொண்டனர்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த தூய்மைக்கான நகரங்களை தேர்ந்தெடுத்து தரவரிசை பட்டியலை வெளியிடுவதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மை நகரங்களில் மேயர் மற்றும் ஆணையரை அழைத்து பரிசுகள் வழங்கி கௌரவிப்பது வழக்கம்.
அந்த வகையில் பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, நகரின் தூய்மை உள்ளிட்ட பல விஷயங்களை அடிப்படையாக வைத்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சகம் பட்டியலை வெளியிட்டது. அதில், தேசிய அளவில் திருச்சி 112வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தது.
திருச்சி மாநகராட்சி தூய்மை நகரத்தின் முதலிடம் பிடித்தாதாக தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்த நிலையில், நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இதற்கான சான்றிதழை மாநகராட்சியில் மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அதேபோல, தேசிய அளவில் தூத்துக்குடி 179வது இடத்தையும், கோவை 182வது இடத்தையும், சென்னை 199வது இடத்தையும் பிடித்துள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.