திருச்சி மாநகராட்சி தூய்மை நகரத்தின் முதலிடம் பிடித்ததற்கான சான்றிதழை மேயர், ஆணையர் பெற்றுக்கொண்டனர்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த தூய்மைக்கான நகரங்களை தேர்ந்தெடுத்து தரவரிசை பட்டியலை வெளியிடுவதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மை நகரங்களில் மேயர் மற்றும் ஆணையரை அழைத்து பரிசுகள் வழங்கி கௌரவிப்பது வழக்கம்.
அந்த வகையில் பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, நகரின் தூய்மை உள்ளிட்ட பல விஷயங்களை அடிப்படையாக வைத்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சகம் பட்டியலை வெளியிட்டது. அதில், தேசிய அளவில் திருச்சி 112வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தது.
திருச்சி மாநகராட்சி தூய்மை நகரத்தின் முதலிடம் பிடித்தாதாக தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்த நிலையில், நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இதற்கான சான்றிதழை மாநகராட்சியில் மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அதேபோல, தேசிய அளவில் தூத்துக்குடி 179வது இடத்தையும், கோவை 182வது இடத்தையும், சென்னை 199வது இடத்தையும் பிடித்துள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.