திருச்சி சிறப்பு முகாமில் காவல் துறை அதிரடி சோதனை செய்ததில் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மத்திய சிறைச்சாலையில் இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்ற வழக்கில் ஈடுபட்ட கைதிகள், மற்றும் இலங்கை தமிழர்கள் 100க்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இம் முகாமில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து இந்த சோதனை தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அன்பு, ஸ்ரீதேவி மற்றும் கே.கே.காவல் சரக உதவி ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு முகாமில் காலை 6:00 மணி முதல் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே சட்டத்திற்கு புறம்பாக செல்போன்கள், லேப்டாப்புகள் பயன்படுத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இன்றும் ஐந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.