திருச்சி ; திருச்சியில் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார், இரண்டு லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகம் பகுதியில் திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் காவல்நிலைய ஆய்வாளர் வீரமணி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்பொழுது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அதில் 21 கிலோ கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் மகன் மதன் என்கிற மதுபாலன் (29) என்பதும், அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பதற்காக ஆந்திராவில் இருந்து கொண்டு வந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் இரண்டு லட்சம் மதிப்புடைய 21 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மதுபாலன் மீது ஏற்கனவே 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
This website uses cookies.