திருச்சி ; திருச்சியில் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார், இரண்டு லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகம் பகுதியில் திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் காவல்நிலைய ஆய்வாளர் வீரமணி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்பொழுது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அதில் 21 கிலோ கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் மகன் மதன் என்கிற மதுபாலன் (29) என்பதும், அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பதற்காக ஆந்திராவில் இருந்து கொண்டு வந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் இரண்டு லட்சம் மதிப்புடைய 21 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மதுபாலன் மீது ஏற்கனவே 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.