திருச்சி மலைக்கோட்டையில் தூய்மை பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அன்பில் வடக்கு தெரு மங்கம்மாபுரத்தை சேர்ந்தவர் ஜெகன் (28). திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். 7 வருடம் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த அவர், கடந்த 1 வருடம் முன்பு பணி நிரந்தரம் செய்யப்பட்டார்.
நேற்று இரவு கோவில் அலுவலகத்தில் இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் கோவிலுக்கு சென்ற போது, அலுவலகத்தில் ஜெகன் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஜெகன் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூய்மை பணியாளராக பணியாற்றிய ஜெகன் தற்கொலை அடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து பரிகார பூஜைக்கு பின்னர் 12 மணி அளவில் கோவில் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.