திருச்சி அருகே பெயிண்டரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலையாளி காவல்துறையிடம் சரணடைந்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சரவணன்(48). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சமுத்திரவள்ளி (45) என்ற மனைவியும், மூன்று மகள்கள் உள்ளனர்.
முதல் மகள் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியிலும், இரண்டாவது மகள் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாகவும் வேலை பார்த்து வருகிறார்கள். மூன்றாவது மகள் திருவெறும்பூர் ஐடியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில், சவுந்தரவள்ளி தனது மூன்றாவது மகளை அழைத்து கொண்டு சென்னையில் உள்ள மகள்களை பார்ப்பதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை சென்றுள்ளார். இந்த சூழலில் இன்று சரவணன் வீட்டிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமாக திருவெறும்பூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சவுந்தரவள்ளி எழில் நகர் பகுதியில் உள்ள ஒரு பந்தல் காண்ட்ராக்ட்டில் வேலை பார்த்து வருவதும், அதில் மேலாளராக உள்ள லால்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் நேற்று இரவு சரவணன் வீட்டிற்கு வந்து சரவணனுக்கு மது வாங்கி கொடுத்து குடிக்க வைத்துள்ளார்.
அப்படி குடிக்க வைத்தது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் சரவணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை ராதாகிருஷ்ணன் திருவெறும்பூர் காவல்துறையிடம் சரணடைந்துள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் அவனிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் .
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.