திருச்சியில் பள்ளியில் கொடுத்த சத்து மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி புத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் (பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில்) 9 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் வில்பிரிட் பவுல் சிங், கடந்த 1 ஆம் தேதி பள்ளியில் அரசு சார்பில் வழங்கிய சத்து மாத்திரைகளை தினசரி ஒன்றாக 30 நாட்கள் சாப்பிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினமே 10 மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அன்று இரவே உடல்நல குறைவு ஏற்பட்ட காரணத்தால் உடனடியாக அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது, திருச்சி அரசு மருத்துவமனையில்இன்று சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்தார்.
தகவல் தெரிந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதனர். இதுகுறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.