திருச்சி ; 10ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணக்கு ஆசிரியையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி – உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியைச் சேர்ந்தவர் தேவி (40). இவர் துறையூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அதுபோக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனது வீட்டில் டியூசன் எடுத்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில், அவரிடம் டியூசன் படித்து வந்த 10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை தேவி நெருங்கி பழகியதாகக் கூறப்படுகிறது. மாணவனின் நடத்தையில் சந்தேகமடைந்த பெற்றோர், மகனின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.
அப்போது, இரவு நேரங்களில் அந்த மாணவர் ஆசிரியை தேவியுடன் அதிக நேரம் பேசி வருவதும், படிப்பில் கவனமில்லாததும் தெரியவந்தது. அதோடு, அந்த மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இது பற்றிய புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியை தேவியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
This website uses cookies.