திருச்சியில் அரசு மதுபானக் கடையில் கத்தி முனையில் மதுபாட்டில்களை இளைஞர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 177 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 3 கோடி ரூபாய் அளவிற்கு மதுபான விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருச்சி திருவானைக்காவலில் செயல்பட்டு வரும் ஒரு மதுபான கடையில் இரு வாலிபர்கள் மது வாங்குகின்றனர். அப்போது விற்பனையாளர் மது பாட்டிலை கொடுத்து காசு கேட்கும் பொழுது, அவரிடம் வம்பு செய்யும் அந்த இளைஞர்களில் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டுகிறார்.
காசு கொடுக்க முடியாது என கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டி விட்டு மதுபாட்டில்களை வாங்கி செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து Tasmac மாவட்ட மேலாளர் உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 17, 18 வயதிற்கு உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற மிரட்டல் சம்பவம் திருச்சி மாவட்டத்தில் தொடர்கதையாகி வருவதாகவும், எனவே தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக டாஸ்மாக் பணியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.