கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்த சேகரிக்கப்பட்ட 750-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து கேரள இளைஞரை கைது செய்தனர்.
கோவை காந்திபார்க் தடாகம் சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேரளாவுக்கு கடத்த ரேசன் அரிசி சேகரிப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் ஆய்வாளர் கோபிநாத் உத்தரவின் பேரில் இன்று காலை 6 மணி அளவில் சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் காவலர்கள் கோவை காந்தி பார்க் – தடாகம் ரோடு சந்திப்பு அருகில் வந்த Tata Ace நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, தலா 25 கிலோ எடை உள்ள 30 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் சுமார் 750 கிலோ பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெபேஸ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவையில் சேகரிக்கப்படும் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி அதை கேரளாவிற்கு கடத்தி சென்று அதிக லாபத்திற்கு விற்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர், மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.