சட்டவிரோதமாக மணல் கடத்தல் : 6 பேர் கைது!!
26 August 2020, 4:31 pmதூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை விளாத்திகுளம் போலீசார் கைது செய்து ஜேசிபி இயந்திரம், 4 யூனிட் மணலுடன் இருந்த லாரி, 2 பைக்குகள் ஆகியற்றை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மார்த்தண்டம்பட்டி கிராம பகுதியில் உள்ள வைப்பாற்றுபடுகையில் சட்ட விரோதமாக மணல் திருடப்படுவதாக அக்கிராம நிர்வாக அதிகாரி வினோத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையெடுத்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மார்த்தண்டம்பட்டி அருகே வைப்பாற்றுபடுகையில் சிலர் ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டு இருப்பதை போலீசார் கண்டறிந்து அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் சிலர் அங்கிருந்து தப்பியோடினர்.
இதையெடுத்து போலீசார் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரயம், 4 யூனிட் மணலுடன் இருந்த லாரி, 2 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததது மட்டுமின்றி, மணல் திருட்டில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.