ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஆர்.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் பெட்டி தேய்க்கும் தொழிலாளி அப்புசாமி -செந்தாமரை தம்பதி.
இவர்களது மகன் சத்யானந்த் வயது 28. இவர் ஏசி மெக்கானிக்காக ஈரோட்டில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் பவானி வட்டத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் ஒன்றிய நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பள்ளி பாளையத்தில் பணிகளை முடித்துவிட்டு ஈரோடு நோக்கி செல்வதற்காக சத்தியானந்த் தனது நண்பருடைய இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, பள்ளிபாளையம் புதிய காவிரி ஆற்று பாலம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது, கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்று புது பாலத்தின் மேலே வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது .
இதையும் படியுங்க: சீமானுக்கு நாகரீகமே தெரியாதா? அவரோட கல்வி தகுதி என்ன? வருண்குமார் ஐபிஎஸ் வக்கீல் ஆவேசம்!
அந்த வேகத்தடை சரிவர தெரியாததால் வேகமாக வந்த சக்தியானந்த் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்தார்.
இதனையடுத்து அங்கு உள்ளவர்கள் அவரை உடனடியாக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பரிதாபமாக அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மகனை விபத்தில் பறிகொடுத்த தாய் செந்தாமரை கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது .
தொடர்ந்து இந்த வேகத்தடையால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்ட நிலையிலும். உரிய நடவடிக்கை எடுக்காமல் நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியப் போக்காக இருந்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.