அரியலூர் தவெக பெண் நிர்வாகி, கட்சியில் தனக்கு மதிப்பளிக்கவில்லை எனக் கூறி இறக்கிய கொடியை மீண்டும் நேற்று ஏற்றியுள்ளார்.
அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியம் கார்குடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி ஜெயபால். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய மகளிரணி நிர்வாகியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தவெக கொடியை கார்குடி பகுதியில் ஏற்றினார்.
பின்னர், தவெகவில் பெண்களுக்கு யாரும் மதிப்பு அளிப்பதில்லை, பெண்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என விஜய் கூறினாலும், அதனைக் கட்சியினர் நடைமுறைப்படுத்துவதில்லை எனக் கூறி, தவெக கொடியை கீழே இறக்கினார். இது அரியலூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேநேரம், பிரியதர்ஷினி ஜெயபாலின் சகோதரர்கள் திமுக மற்றும் விசிகவில் இருப்பதாகவும், இதனால் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பிரியதர்ஷினி கொடியை இறக்கி கட்சியினர் மீது அவதூறு பரப்புவதாக அப்பகுதி தவெக தொண்டர்கள் கூறிய வீடியோவும் வைரலானது.
இந்த நிலையில், மீண்டும் தவெக கொடியை பிரியதர்ஷினி அதே இடத்தில் ஏற்றி வைத்தார். அப்போது, நான் தவெகவில் இருந்து வெளியேறுவதாக கூறவில்லை, எனக்கு சில முரண்பாடுகள் இருந்தது, எனவே, நான் தவெக கொடியை மீண்டும் ஏற்றுவேன் என பிரியதர்ஷினி செய்தியாளர்களிடம் கூறினார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர்… காத்திருந்த டுவிஸ்ட்!
இவ்வாறு தவெக பெண் நிர்வாகி, தனக்கு கட்சியினர் மதிப்பளிக்கவில்லை எனக் கூறி, ஏற்றிய கொடியை இறக்கிவிட்டு, மீண்டும் தான் கட்சியில் இருந்து விலகவில்லை எனத் தெரிவித்து, கொடியை ஏற்றி வைத்தது தவெகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.