செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் தனியார் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார்.
தனியார் கடை திறப்பு விழாவை முடித்த பிறகு, கடையை சுற்றி பார்த்தார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெறுவதாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
பத்திரிகையாளர் சந்திப்பு இருப்பதாக தெரிவித்ததின் அடிப்படையில் பத்திரிகையாளர்கள், காத்திருந்தபோது மேடைக்கு சென்று பேட்டி தருவதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மேடைக்கு சென்று காத்திருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகள் மற்றும் கருப்பு உடை அணிந்திருந்த பவுன்சர்களின் உதவியுடன், பத்திரிக்கையாளர் கேள்விக்கு பயந்து கடையிலிருந்து அவசர அவசரமாக வெளியேறி காரில் ஏறி 30 நொடிக்குள் சிட்டாக பறந்து சென்றார்.
இதையும் படியுங்க: 50 வருடங்களுக்கு முன் மூதாட்டியிடம் திருடிய ரூ.37.50 பணம்.. ₹3 லட்சமாக திருப்பி கொடுத்த தொழிலதிபர்!
கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய புஸ்ஸி ஆனந்த் வருகையை முன்னிட்டு, அவருக்கு பூங்கொத்து கொடுப்பதற்காக காத்திருந்த நிர்வாகிகளும் ஏமாற்றும் அடைந்தனர்.
கட்சியின் பொதுச் செயலாளர் பேட்டி கொடுக்க பயந்து ஓடிய சம்பவம் தவெக தொண்டர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.