தவெக தலைவர் விஜய் எங்களுக்கு ஆதரவளித்தால், நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதில் எந்தத் தவறுமில்லை என 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை: 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில், அரசாணை 149ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, திருச்சியில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியான கே.எம்.கார்த்திக் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு ஆதரவாக பேசினார்.
அது மட்டுமல்லாமல், ஆசிரியர் சங்கத்தின் தேனி மாவட்ட மகளிரணிச் செயலாளர் சத்தியவாணி பேசுகையில், “நான் 16 வயதில் இருந்து விஜய் ரசிகை. அவர் சினிமாவில் மனிதன் என்றால், பொது வாழ்க்கையில் மாமனிதன். நிச்சயம் அவரால் நமக்கு நல்லது நடக்கும்” எனப் பேசியது, ஆசிரியர்களிடம் கைதட்டலைப் பெற்றுத் தந்தது.
இவ்வாறு திமுக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆசிரியர் போராட்டத்தில் பங்கேற்ற தவெகவினரால் வழக்கமான அரசியலே தோன்றுவதாக அரசியல் மேடையில் பேசப்பட்டது. இந்த நிலையில், இது குறித்து பிரபல தனியார் நாளிதழிடம் பேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ம.இளங்கோவன், “நான் மதுரை பழங்காநத்தம் திமுக மாணவரணி துணை அமைப்பாளராக எட்டு ஆண்டு காலம் இருந்துள்ளேன்.
இவ்வாறு இருந்தும் என்ன பயன்? இந்த ஆட்சியைக் கொண்டு வர நாங்கள் பக்கபலமாக இருந்துள்ளோம். ஆனால், திமுக ஒன்றிரண்டு பொய்களைச் சொல்லி ஆட்சிக்கு வரவில்லை. சொன்னது எல்லாமே பொய்தான். நடப்பது கலைஞர் ஆட்சியே இல்லை. தவெக தலைவர் விஜய் எங்களுக்கு ஆதரவளித்தால், நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதில் எந்தத் தவறுமில்லை.
இதையும் படிங்க: 8 மாத குழந்தைக்கு விஷம்.. தகாத உறவால் கொலைகாரனாக மாறிய தந்தை!
அதிமுக ஆட்சியில் 28 போராட்டங்களை நடத்திய நாங்கள், திமுக ஆட்சியில் 52 போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். திமுககாரனைத் தவிர்த்து வேறு யாராலும் எங்களை வீழ்த்த முடியாது என ஸ்டாலின் கூறுவார். இப்போது போராடி வரும் நாங்கள் அனைவரும் ஒரு காலத்தில் திமுககாரர்கள்தான் என்பதை அவர் உணர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.