தமிழகம்

பாசிச பாயாசம்.. அண்ணாமலையை விமர்சித்த விஜய்.. TVK Vijay full Speech!

நிதியைக் கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை, வாங்க வேண்டியது இவர்களின் உரிமை என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு: விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில், இன்று இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி, மாமல்லபுரம் அருகே ஈசிஆர் சாலையில் உள்ள ரிசார்ட்டில் நடைபெற்றது. இந்த விழாவில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

இதனையடுத்து, விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், “2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வரலாறு படைக்கும். 1967, 1977 போன்று 2026ஆம் ஆண்டும் மாற்றம் வரும். அரசியல் என்றாலே வேற லெவல்தான் இல்லையா.. அரசியலுக்கு, மக்களுக்குப் பிடித்தவர்கள் வந்தால் ஒரு சிலருக்கு எரிச்சல் வரும்.

நம்முடைய கட்சி பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது. நம் கட்சி எளிய, மக்களுக்கான கட்சி. பண்ணையார்கள்தான் கடந்த காலங்களில் பதவியில் இருப்பார்கள். தற்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களா மாறி விடுகிறார்கள்.

மக்களின் நலனைப் பற்றியோ, நாட்டின் நலனைப் பற்றியோ, வளர்ச்சியைப் பற்றியோ கவலை இல்லாமல், பணம் பணம் என்று திரியும் பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதே நமது வேலை. தவெக, எந்தவொரு பெரிய கட்சிக்கும் சளைத்தது இல்லை. இப்போது ஒரு புதிதாக ஒரு பிரச்னையை கிளப்பிவிட்டுள்ளார்கள்.

அது, மும்மொழிக் கொள்கை. மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தாவிட்டால் கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு கொடுக்கமாட்டார்களாம். எல்கேஜி, யூகேஜி பசங்க சண்டை போடுவார்கள் இல்லையா, அதுபோல் இந்த விஷயத்தில் நடந்துகொள்கிறார்கள்.

நிதியைக் கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. வாங்க வேண்டியது இவர்களின் உரிமை. ஆனால் இவர்கள் இருவரும், அதுதான் நமது பாசிசமும், பாயாசமும் பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: வெயிட்டிங்கே வெறி ஆகுதே…அலற விடும் ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட்.!

இருவரும் அடித்துக் கொள்வது போல் அடித்துக் கொள்வார்களாம், அதை நாங்கள் நம்ப வேண்டுமாம். What Bro.. It’s very Wrong Bro. யார் சார் நீங்கள்? எல்லாம் எங்கே இருக்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பது மக்களுக்கு நனறாக தெரியும்.

தமிழகம் சுயமரியாதை உள்ள ஊர். நாம் எல்லோரையும் மதிப்போம். ஆனால் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டோம். எல்லா மொழிகளையும் மதிப்போம். அதில் மாற்றுக்கருத்து கிடையாது. தனிப்பட்ட மொழிகளை யார் வேண்டுமென்றாலும் படிக்கலாம். அது அவர்களது உரிமை” எனக் கூறினார்.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

2 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

3 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

3 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

3 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

4 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

5 hours ago

This website uses cookies.