சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மோ. பெருமாள் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே பகுதியை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி பிரேமா என்கிற பிரியா அவரது கணவர் சந்திரன், பிரேமாவின் தம்பி சேட்டு ஆகிய மூன்று பேரும் ஊரில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விநியோகம் செய்து வருவதாகவும் வாழப்பாடி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தும் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இதையும் படியுங்க: அதிமுக செயலாளருக்கு அரிவாள் வெட்டு.. தூத்துக்குடியில் தடியங்காயால் பிரச்னையா?
மேலும் ஊர் பொதுமக்கள் சார்பில் பிரேமாவிடம் சென்று இதுபோன்று பள்ளி மாணவர்களையும் இளைஞர்களையும் சீரழிக்க கூடாது என தெரிவித்ததை தொடர்ந்து வெளியூரிலிருந்து அடியாட்களை வர வைத்து பிரச்சனையில் தலையீடு செய்பவர்களை அடியாட்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் முத்து என்பவர் படுகாயம் அடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்
தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி என்ற பெயரில் பிரேமா என்கிற பிரியா அவரது கணவர் சந்திரன் தம்பி சேட்டு ஆகியோர் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் விபச்சாரம் உள்ளிட்ட தொழிலில் ஈடுபடுவதால் பெரிய ஆட்களின் துணையோடு ஊர் பொதுமக்களை மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட மூன்று பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் கவுண்டர் சண்முகம் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.