பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வீடு சென்னை அபிராமிபுரத்தில் உள்ளது. இந்த வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக அவரது மனைவி தர்ஷணா பாலா அபிராமிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் மார்ச் 30-ஆம் தேதி புகாரளித்தார்.
அந்த புகாரில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி இந்த தங்க நகைகளை பார்த்ததாகவும் அதன்பின்னர் பிப்ரவரி மாதம் வீட்டில் நகைகளை பார்த்தபோது காணவில்லை எனவும் வீட்டில் வேலை செய்யும் மேனகா மற்றும் பெருமாள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அபிராமிபுரம் போலீசார் வீட்டில் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் ஆகியோரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் பணியாட்கள் ஒன்பது பேரிடம் இதுவரை விசாரணையும் நடைபெற்றது.
இந்நிலையில், விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடப்பட்ட விவகாரத்தில், வீட்டில் வேலை செய்யும் அனைவரிடமும் போலீசார் விசாரனை நடத்தியதில் யாரும் திருடவில்லை என தெரியவந்துள்ளது.
விஜய் யேசுதாஸ் வெளிநாட்டில் இருப்பதால் பலமுறை அவரை போலீசார் தொடர்பு கொண்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் புகார் அளித்த விஜய் யேசுதாஸின் மனைவி தக்ஷனாவும் விசாரணைக்கு சரியான விளக்கம் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நகைகள் வைக்கப்பட்டிருந்த நம்பர் பதிவிடக்குடிய லாக்கர் உடைக்கப்படவில்லை, லாக்கரின் கடவுச்சொல் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரின் மனைவிக்கு மட்டுமே தெரியும் எனவும் 40 நாட்கள் கழித்து புகார் அளித்தது குறித்து போலீசார் சந்தேகிக்கின்றனர்.
விளக்கம் கேட்டபோது விஜய் யேசுதாஸின் குடும்பத்தினர் சரியாக பதிலளிக்கவில்லை என்றும் சந்தேகத்தின் பேரில் விஜய் யேசுதாஸின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் பொய் புகார் அளிக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் என போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.