Categories: தமிழகம்

ஏரியில் மிதந்த பெண் சடலம்…கழுத்தை நெரித்து கொலை செய்த மர்மநபர்: தற்கொலை வழக்கில் திருப்பம்..!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற கட்டிட தொழிலாளியின் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசி நாடகமாடிய கொலையாளிகள்பிரேதபரிசோதனையில் கொலை செய்தது
தெரியவந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள சிறுங்காவூர் ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சிறுங்காவூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி பக்கிரிசாமியின் மனைவி விஜயலட்சுமி அங்கு உள்ள ஏரியில் மீன் பிடித்த போது தவறி விழுந்து உயிர் உயிரிழந்து இருக்கலாம் என்ற கோணத்தில் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த செங்குன்றம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஏரியில் தனியாக மீன் பிடித்துக் கொண்டு இருந்த விஜயலட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து காவல்துறையினரை திசைதிருப்ப ஏரியில் மூழ்கடித்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கொலையாளிகள் கைது செய்யப்பட்டால் மட்டுமே கொலைக்கான உண்மை விவரங்கள் வெளியாகும்என காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.