தமிழகம்

இளம்பெண்களுக்கு ஃப்ரீ.. ராமேஸ்வரம் உடை மாற்றும் அறையில் அமேசான் ஆர்டரைக் கண்டுபிடித்த ஐடி பெண்!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் உள்ள தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்திருந்தது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம்: உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் அக்னி தீர்த்தக் கடலில், நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, சாமி தரிசனம் மேற்கொண்டு செல்கின்றனர். இவ்வாறு கடற்கரையில் நீராடிய பிறகு, சுற்றுலாப் பயணிகள் உடை மாற்றுவதற்கு தனியார் உடை மாற்று அறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், குடும்பத்துடன் ராமேஸ்வரத்தில் புனித நீராடிவிட்டு வந்துள்ளார். பின்னர். குடும்பத்தினர் அனைவரும் அக்னி தீர்த்தக் கடற்கரையில் உள்ள தனியார் உடை மாற்றும் அறைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, வெளியில் இருந்த ஒருவர், இளம்பெண்ணைப் பார்த்து இலவசம் தான், உடை மாற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த ஐடி ஊழியரான அப்பெண், உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா ஏதேனும் உள்ளதா என தனது செல்போனைப் பயன்படுத்தி சோதனை செய்துள்ளார்.

அப்போது, அங்குள்ள டைல்ஸ் சுவற்றில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். பின்னர், மற்ற அறைகளிலும் உள்ளதா என, அனைத்து அறைகளிலும் சோதானை செய்துள்ளார். அப்போது, அங்கு இருந்த 3 கேமராக்களை எடுத்து உள்ளார்.

பின்னர், உடையை மாற்றிக்கொண்டு, நேராக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து, அருகில் உள்ள காவல் நிலையத்தில், கேமரா ஆதாரங்கள் உடன் அப்பெண் புகார் அளித்து உள்ளார். இதன்படி, மீரா மைதீன் (38) என்பவரை போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ராமேஸ்வரம் தம்பியான்கொல்லை தெருவைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (34) மற்றும் மீரா மைதீன் (36) ஆகிய இருவரும் பெண்கள் ஆடை மாற்றுவதை ரகசிய கேமராவில் வீடியோ எடுத்து பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ‘நக்சல்களுடன் வெற்றிமாறனுக்கு தொடர்பு’.. இந்து மகா சபா பரபரப்பு புகார்!

இதனைத் தொடர்ந்து, ராஜேஷ் கண்ணன் மற்றும் மீரா மைதீன் ஆகியோரது செல்போன்களைப் பறிமுதல் செய்து போலீசார் சோதனை நடத்தினர். அதில், ஏராளமான பெண்களின் உடை மாற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன. இதையடுத்து போலீசார் ரகசிய கேமரா, செல்போன், மெமரி கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த நவம்பர் மாதம் 2 கேமாரக்களும், டிசம்பரில் ஒரு கேமராவையும் அமேசானில் ஆர்டர் போட்டு வாங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அங்கு உள்ள குளியலறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகளை சோதனையிட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

5 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

6 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

6 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

7 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

7 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

8 hours ago

This website uses cookies.