தமிழகம்

இளம்பெண்களுக்கு ஃப்ரீ.. ராமேஸ்வரம் உடை மாற்றும் அறையில் அமேசான் ஆர்டரைக் கண்டுபிடித்த ஐடி பெண்!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் உள்ள தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்திருந்தது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம்: உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் அக்னி தீர்த்தக் கடலில், நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, சாமி தரிசனம் மேற்கொண்டு செல்கின்றனர். இவ்வாறு கடற்கரையில் நீராடிய பிறகு, சுற்றுலாப் பயணிகள் உடை மாற்றுவதற்கு தனியார் உடை மாற்று அறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், குடும்பத்துடன் ராமேஸ்வரத்தில் புனித நீராடிவிட்டு வந்துள்ளார். பின்னர். குடும்பத்தினர் அனைவரும் அக்னி தீர்த்தக் கடற்கரையில் உள்ள தனியார் உடை மாற்றும் அறைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, வெளியில் இருந்த ஒருவர், இளம்பெண்ணைப் பார்த்து இலவசம் தான், உடை மாற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த ஐடி ஊழியரான அப்பெண், உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா ஏதேனும் உள்ளதா என தனது செல்போனைப் பயன்படுத்தி சோதனை செய்துள்ளார்.

அப்போது, அங்குள்ள டைல்ஸ் சுவற்றில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். பின்னர், மற்ற அறைகளிலும் உள்ளதா என, அனைத்து அறைகளிலும் சோதானை செய்துள்ளார். அப்போது, அங்கு இருந்த 3 கேமராக்களை எடுத்து உள்ளார்.

பின்னர், உடையை மாற்றிக்கொண்டு, நேராக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து, அருகில் உள்ள காவல் நிலையத்தில், கேமரா ஆதாரங்கள் உடன் அப்பெண் புகார் அளித்து உள்ளார். இதன்படி, மீரா மைதீன் (38) என்பவரை போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ராமேஸ்வரம் தம்பியான்கொல்லை தெருவைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (34) மற்றும் மீரா மைதீன் (36) ஆகிய இருவரும் பெண்கள் ஆடை மாற்றுவதை ரகசிய கேமராவில் வீடியோ எடுத்து பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ‘நக்சல்களுடன் வெற்றிமாறனுக்கு தொடர்பு’.. இந்து மகா சபா பரபரப்பு புகார்!

இதனைத் தொடர்ந்து, ராஜேஷ் கண்ணன் மற்றும் மீரா மைதீன் ஆகியோரது செல்போன்களைப் பறிமுதல் செய்து போலீசார் சோதனை நடத்தினர். அதில், ஏராளமான பெண்களின் உடை மாற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன. இதையடுத்து போலீசார் ரகசிய கேமரா, செல்போன், மெமரி கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த நவம்பர் மாதம் 2 கேமாரக்களும், டிசம்பரில் ஒரு கேமராவையும் அமேசானில் ஆர்டர் போட்டு வாங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அங்கு உள்ள குளியலறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகளை சோதனையிட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

13 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

13 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

14 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

15 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

15 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

16 hours ago

This website uses cookies.